Top News
| அட்டாளைச்சேனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கலந்துரையாடல் வெற்றிகரமாக நடைபெற்றது | | பாலமுனை வைத்தியசாலைக்கு IPHS Campus நிறுவனத்தால் நன்கொடை வழங்கல் | | 37 ஆண்டு கல்விப் பணியை நிறைவு செய்த பிரதி அதிபர் எச்.எம். ரசீனுக்கு நெகிழ்வான பிரியாவிடை |
Jul 19, 2025

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களின் தாக்குதலினால் முதலாமாண்டு 09 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted on July 15, 2025 by Admin | 86 Views

ஒலுவில் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்றுவரும் முதலாமாண்டு மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 மாணவர்கள் இரு வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (14) இரவு, ஒலுவில் வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த 5 மாணவர்கள் ஒலுவில் பிராந்திய வைத்தியசாலையிலும், மற்றொரு 4 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த மாதம் பகிடிவதை சம்பவங்கள் தொடர்பாகவே இத்தகைய முறைகேடுகள் முன்னர் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இவ்விவகாரம் தொடர்பான ஒரு வீடியோவும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் மூன்றாமாண்டு மாணவர்கள் குழுவொன்று, முதலாமாண்டு மாணவர்களின் தங்கும் அறைகளுக்குள் நுழைந்து, அவர்களை தரையில் முழந்தாளிடச் செய்து, தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இவ்வாறு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தவறான பழக்கவழக்கங்கள் மீதான கவனம் மற்றும் நடவடிக்கைகள் அவசியம் என மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.