Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் அவசியமில்லை

Posted on July 19, 2025 by Admin | 150 Views

பிறந்து இரு நாட்களே ஆன சிசு ஒருவர் 2025 ஜூலை 17ஆம் திகதி வயல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச் சம்பவம் தொடர்பாக, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நேற்று (ஜூலை 18) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, பிறப்புச் சான்றிதழ்களில் பெற்றோரின் திருமணப் பதிவு விவரத்தைச் சேர்ப்பது கட்டாயமல்ல எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும், குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை பதிவு செய்வது கட்டாயம் அல்ல என்றும், இது தொடர்பான நடைமுறைகளை சீரமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.