Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி

Posted on September 3, 2025 by Admin | 84 Views

குருநாகல் நோக்கி மீரிகம வழியாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த எரிபொருள் டேங்கர் லாரி, 41-ஆவது கிலோமீட்டர் கல் அருகே (ஹரங்கஹவைப் பகுதியில்) இயந்திரக் கோளாறு காரணமாக முன்போன மற்றொரு லாரியுடன் மோதி உள்ளது.

மோதியதையடுத்து இரண்டு வாகனங்களும் நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியை உடைத்து கீழே அமைந்திருந்த வயலுக்குள் கவிழ்ந்தன.

இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், எரிபொருள் டேங்கர் லாரியின் ஓட்டுநரும், அவருடன் இருந்த உதவியாளரும் காயமடைந்த நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.