Top News
| அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு | | கேன்களில் எரிபொருள் நிரப்புவதற்கு தடை | | முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினர் பிணையில் விடுவிப்பு |
Jun 19, 2025

ஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை நிறைவு புதிய நேரம் நடைமுறை

Posted on May 29, 2025 by Hafees | 128 Views

கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் சேவையை 24 மணிநேரமும் முன்னெடுக்கும் நடைமுறை, எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 7 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் பிரதான அலுவலகத்தில் சாதாரண சேவைக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல் திணைக்களம் தெரிவித்துள்ளது.