Top News
| இலங்கையில் ஒரே நாளில் 13000 ரூபாவால் சரிந்த தங்கத்தின் விலை | | வேறொரு தொலைபேசி இலக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை பெறும் முறை | | போலி இணையத்தளங்கள் மூலம் QR குறியீடு மோசடி |
Mar 20, 2026

கடந்த 24 மணித்தியாலங்களில் 3700க்கு மேற்பட்டோர் கைது

Posted on September 13, 2025 by Admin | 250 Views

காவல்துறை பொது பரிசோதகரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது 3,709 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை மத்திய பிரிவு வெளியிட்ட தகவலின்படி, கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மட்டும் 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், குற்றச் செயல்களில் நேரடியாக தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கையின் போது நாடளாவிய ரீதியில் மொத்தம் 26,985 பேரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது