Top News
| முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ விரைவில் கைது | | ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தலைவர் ரஊப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு | | ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்றி கைதி விடுதலை – ஜனாதிபதி செயலகம் அதிர்ச்சி |
Jun 8, 2025

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

Posted on May 30, 2025 by Hafees | 55 Views

உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதற்காக, இலங்கையில் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் அவசியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்காலிக விதிமுறைகள் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 240 பேர் கொண்ட அமைப்பின் யோசனை தொகுப்பு நேற்று (மே 29) அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

முந்தைய அரசாங்கங்களால் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டும், எந்த புதிய சட்டமும் உருவாக்கப்படாத நிலை தொடர்ந்துள்ளது. தற்போது, புதிய பயங்கரவாத தடுப்பு சட்டம் உருவாக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்