Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை – சந்தேக நபர் கைது

Posted on June 2, 2025 by Hafees | 294 Views

ஹொரணையில் உள்ள ரமுன மர ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு தொழிலாளியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்ததாக அங்குருவத்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய, செவனகல பகுதியைச் சேர்ந்த 55 வயதானவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலை முடிந்ததும் இரண்டு தொழிலாளர்களும் இடைவேளை வாக்குவாதம் அதிகரித்தது. அதன் பின்னர் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

மொரன்ன, வரகா வெஹெரவைச் சேர்ந்த 52 வயது நபரை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியுடன் கைதுசெய்துள்ளனர்