Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை – சந்தேக நபர் கைது

Posted on June 2, 2025 by Hafees | 118 Views

ஹொரணையில் உள்ள ரமுன மர ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களில் ஒருவர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மற்றொரு தொழிலாளியை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்ததாக அங்குருவத்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய, செவனகல பகுதியைச் சேர்ந்த 55 வயதானவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேலை முடிந்ததும் இரண்டு தொழிலாளர்களும் இடைவேளை வாக்குவாதம் அதிகரித்தது. அதன் பின்னர் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

மொரன்ன, வரகா வெஹெரவைச் சேர்ந்த 52 வயது நபரை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டியுடன் கைதுசெய்துள்ளனர்