அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல், 50 ஓவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், இருபதுக்கு இருபது (T20) போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேக்ஸ்வெல் தனது ஆட்டத்திறமையாலும், பந்துவீச்சு மற்றும் அதிரடி ஆட்டங்களாலும் T20 போட்டிகளில் முக்கிய வீரராக உள்ளார். அவர் இந்த தீர்மானத்தை, தனது சீரான செயல்திறனையும் எதிர்காலத் திட்டங்களையும் கருத்தில் கொண்டு எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.