Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஆட்பதிவு சேவைகள் நாளை முதல் வழமைக்கு

Posted on April 19, 2026 by Admin | 212 Views

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொது மக்கள் சேவைகள் நாளை (20) முதல் மீண்டும் வழமையான முறையில் ஆரம்பிக்கப்படுகின்றன. இதனுடன் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவையும் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.