இலங்கையில் இம்முறை ஹஜ் பெருநாள் எதிர்வரும் மே 28ஆம் திகதி கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியின் இறுதியான 12ஆவது மாதமான துல் ஹஜ் மாதத்திற்கான புதிய தலைப்பிறை இன்று நாட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் மே 19ஆம் திகதியாக கணிக்கப்படுவதுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு மே 28ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொன்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.