Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Posted on May 23, 2026 by Admin | 74 Views

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிக்கையின் படி சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

அதேவேளை அனுராதபுர மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மாகாணத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.