Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சம்மாந்துறையில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Posted on July 5, 2026 by Admin | 110 Views

(சம்மாந்துறை செய்தியாளர் – கிருபா)

சம்மாந்துறை, பழைய வளத்தாப்பிட்டி கிராமம் – 01 பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய மயில்வாகனம் வாசு என்ற குடும்பஸ்தர் மாடு மேய்க்கச் சென்ற இடத்தில் திடீரென உயிரிழந்துள்ளார்.

வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர். இதன்போது அவர் வயல் பகுதியை ஒட்டிய மேய்ச்சல் தரையில் சடலமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த மரண விசாரணைகளை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் கௌரவ A. M. நஷீல் நேரில் சென்று முன்னெடுத்தார்.

மரணத்திற்கான துல்லியமான காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.