(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை ‘ஹவுஸ் ஒப் இங்கிலிஷ்’ (House of English) கல்வி நிறுவனத்தில், மாணவர்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும், டெங்கற்ற சுகாதாரமான சூழலை உருவாக்கும் வகையிலும் “டெங்கற்ற பாடசாலை, சிறந்த பாடசாலை” எனும் தொனிப்பொருளிலான விசேட விழிப்புணர்வுக் கலந்துரையாடலும் சிரமதானப் பணி பணிப்பாளர் எம்.எஸ். ஜனிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இச்செயற்றிட்டம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலைச் சூழலைத் தூய்மையாகப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு நிகழ்வில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) எஸ்.ரி. கலீலுர் ரஹ்மான் கலந்துகொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட ஆலோசனைகளையும் நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்கியதுடன் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு துப்பரவு செய்யும் பாரிய சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




