Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சுற்றுலா செல்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted on April 12, 2026 by Admin | 242 Views

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் சமூக ஊடகப் பயன்பாட்டில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விடுமுறை காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதைத் தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு தகவல்களை நேரடியாக பகிர்வது, வீட்டில் யாரும் இல்லாத நிலையை வெளிப்படுத்தி திருடர்களுக்கு வாய்ப்பாக அமையக்கூடும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

எனவே சுற்றுலா மற்றும் விடுமுறை அனுபவங்களை பயணம் முடிந்து வீடு திரும்பிய பின்னரே சமூக ஊடகங்களில் பகிர வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.