வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பணிகள் சுயாதீனமாகவும் நீதியுடனும் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து எரிசக்தி அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் பதவிகளை விலகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.