கிழக்கு மாகாண புதிய உள்ளூராட்சி ஆணையாளராக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றிவரும் ஏ.டி.எம். ராபி அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று காலை நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வருட காலமாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படாதிருந்த நிலையில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம். அஸ்மி பதில் உள்ளூராட்சி ஆணையாளராகக் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்தப் பதவிக்கு ஏ.டி.எம். ராபி நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.