Top News
| அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் மரணப் பொறியாக மாறியுள்ள வடிகான்- கண்டும் காணாமல் இருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை | | பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு |
Aug 16, 2026

130 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தாமதம் குறித்து பாராளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை எம்.பி இன்று கேள்வி

Posted on July 22, 2026 by Admin | 104 Views

முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நான்கு வருடங்களாகப் பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள 130 அரபுக் கல்லூரிகளின் பதிவுகள் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை இன்று(22) பாராளுமன்றத்தில கேள்வியெழுப்பவுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வாய்மூல விடைக்கான வினாக்களின் போதே இந்த முக்கிய விடயத்தை அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளார்.

அரபுக் கல்லூரிகளைப் பதிவு செய்வதற்காக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு 130 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த நான்கு வருடங்களாக குறித்த திணைக்களத்தினால் இவற்றுக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இந்தத் தாமதம் தொடர்பில் அமைச்சர் அறிவாரா என அவர் சபையில் வினவவுள்ளார்.